9Lqm9a990msnyr9pKN9W
உலகம்செய்திகள்

உக்ரைனில் திடீரென தோன்றியுள்ள ஒளிப்பிழம்பு!

Share

உக்ரைனில் திடீரென தோன்றியுள்ள ஒளிப்பிழம்பு!

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கீவ் என்ற நகரின் வான் பரப்பில் திடீரென பிரகாசமான ஒளிப் பிழம்பு தோன்றியது.

மேலும் மக்களை எச்சரிக்கும் வகையில் விமான தாக்குதலுக்கான சைரன்களும் ஒலிக்கப்பட்டதால் பொதுமக்கள் பதட்டம் அடைந்தனர்.

இருப்பினும் எந்த ஒரு தாக்குதலும் தலைநகரில் நடத்தப்படவில்லை என்று இராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நாசாவின் செயல் இழந்த செயற்கைக்கோள் அல்லது விண்கல் வான் பரப்பில் எரிந்து விழுந்ததால் இந்த ஒளிப்பிழம்பு தோன்றி இருக்கலாம் என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...