IMG 20230405 WA0033
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால்பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

Share
இந்தியாவின், ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் “இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின்” ஒரு அங்கமாக, யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
றோட்டறி மாவட்டம் 2982 இன் முன்னாள் உதவி ஆளுநர் றொட்டேரியன் சரவணன் தலைமையில் நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரின் கருத்தரங்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாவற்குழிப் பகுதில் உள்ள கீழ் உழைப்புக் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பனை சார் உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருள்களின் உற்பத்தி தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்காலத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்படியாக மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன் உற்பத்திப் பொருள்களுக்கான மூலதன உதவியும் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் பின்னர் பயனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முழுமையாக கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் வசதியும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனுசரணை ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தின் முதல் அணி பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் தொடர்ந்தும் பயனாளிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதரக அதிகாரியும், பிரதித் துணைத் தூதுவருமான ராம் மகேஷும் விருந்தினர்களாக கைதடியில் அமைந்துள்ள  பனை ஆராய்சி நிறுவனத்தின் முகாமையாளர் பி. விஜியேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இந்தியாவின் றோட்டறி மாவட்டம் 2982 இன் உதவி ஆளுநர் றொட்டேறியன் பி. தக்‌ஷாயினி, ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் தலைவர் றொட்டேறியன் ரி. வி. முருகன் மற்றும் செயற்றிட்ட அனுசரணையாளர்களான ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழக உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினரும், யாழ்பாணம் றோட்டறிக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...