1780448 usa
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பம்

Share

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி உலகம் பூராகவுள்ள இந்துக்களால் 24 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் பல மாகாணங்களின் தலைநகர், ஆளுநர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

வெள்ளை மாளிகையில் வருகிற 24 ஆம் திகதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் பஙகுபற்ற ஏராளமான இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்நது 26 ஆம் திகதி வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15 ஆம் திகதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

#worldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15
இலங்கைசெய்திகள்

செம்மணியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடவுள்ளது. இலங்கை...

14
இலங்கைசெய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சி வேண்டுகோள்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது என...

13
இலங்கைசெய்திகள்

செம்மணி தடயப்பொருட்களை பார்வையிட மக்களுக்கு அழைப்பு.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

யாழ். சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள...

12
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு...