ஜீவன் தியாகராஜா
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் முயற்சி!

Share

யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அனுமதி வழங்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடக்கு மாகாண ஆளுநர், வெசாக் அலங்காரங்களை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மாநகர சபை பதில் மேயரிடம் நேரடியாகக் கோரியிருந்தார். அதற்கு அமைவாக இணையவழியில் மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது முன்னரே அனுமதி கோரவில்லை என்றும், வேண்டுமென்றே வெசாக் அன்று அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் எழுத்துமூலம் அனுமதி கோரினால் ஆராயலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனது உத்தரவை உதாசீனப்படுத்தியதால், மாநகர சபையை கலைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்குரிய வழிகாட்டல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில தரப்புக்களால் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

அதற்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்காக சில ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் அணுகியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...