தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை 100 பவுண் நகை பணம் கொள்ளை
இந்தியாசெய்திகள்

தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை! – 100 பவுண் நகை, பணம் கொள்ளை

Share

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினம் அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் கண் கண்ணாடி கடை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிஜாம் வீட்டின் முன் நின்று கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் உள்ளே குதித்த 3 மர்மநபர்கள் நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான நிஜாம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த கும்பல் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அலுமாரித் திறப்பைக் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஆயிஷா பேபியைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து அலுமாரித் திறப்பைப் பறித்து அலுமாரியில் இருந்த 100 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்றது.

இது குறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் கொலை, கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியும் சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

தொழில் போட்டி காரணமாக தொழிலதிபர் நிஜாம் கொல்லப்பட்டாரா? அல்லது கொள்ளைச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபரைக் கொலை செய்துவிட்டு 100 பவுண் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...