IMG 20220322 WA0001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையர்கள் தமிழகத்துக்குப் படையெடுப்பு!

Share

இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசியப்பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்குப் படையெடுத்துச் செல்லும் சூழல் உருவாகி வருகின்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் இந்தியாவுக்குச் சொந்தமான 6 தீடைகளும், இலங்கைக்குச் சொந்தமான 7 தீடைகளும் உள்ளன. இந்நிலையில், தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஓர் ஆண், இரு பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 3 குழந்தைககள் என 6 பேர் நிற்கின்றனர் என்று கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கியூ பிரிவுப் பொலிஸார், இந்தியக் கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து கடலோர காவல் படையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் முதல் கட்டமாக இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தமை தெரியவந்துள்ளது.

WhatsApp Image 2022 03 22 at 1.51.36 PM

இதையடுத்து 6 பேரையும் இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பலில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் தரும் உறுதியான தகவல்களை அடுத்து அவர்களை இலங்கை அகதிகள் முகாமில் வைப்பார்களா அல்லது சிறைக்குக் கொண்டு செல்வார்களா என்பது முழு விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.

மேலும், தற்போது சென்றுள்ள 6 பேர் அகதிகளாக எதற்கு வந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், இது போன்று இலங்கையில் இருந்து அகதிகளாக ஏராளமானோர் தமிழகத்துக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர் என்று விசாரணையில் தெரியவருகின்றது.

இதையடுத்து இலங்கையில் இருந்து அகதிகளாக அதிகமானோர் தமிழகத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனக் கிடைத்த தகவலை அடுத்து இந்தியக் கடலோர காவல் படை, கியூ பிரிவு, மரைன் பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...