3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வடக்கு ரயில் மார்க்கத்தில் முறைகேடு – ஜனாதிபதிக்கு முறைப்பாடு!!

Share

வடக்கு ரயில் மார்க்க திட்டத்தின் பின்னணியில் பாரியளவிலான மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

இந்திய கடனுதவியுடன் வடக்கு வீதியை அபிவிருத்தி செய்து இரட்டைப் பாதையாக தரமுயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

ஏனைய நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை ஒற்றைப் பாதையாகப் சீரமைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை நாட்டுக்கு பயனுள்ள திட்டமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி நோக்கங்களுக்காக மார்ச் 5 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.

தற்போது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் தொடருந்துகள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...