3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வடக்கு ரயில் மார்க்கத்தில் முறைகேடு – ஜனாதிபதிக்கு முறைப்பாடு!!

Share

வடக்கு ரயில் மார்க்க திட்டத்தின் பின்னணியில் பாரியளவிலான மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

இந்திய கடனுதவியுடன் வடக்கு வீதியை அபிவிருத்தி செய்து இரட்டைப் பாதையாக தரமுயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

ஏனைய நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை ஒற்றைப் பாதையாகப் சீரமைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை நாட்டுக்கு பயனுள்ள திட்டமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி நோக்கங்களுக்காக மார்ச் 5 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.

தற்போது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் தொடருந்துகள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...