இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கம்மன்பில எச்சரிக்கை!!

Share

எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும்.

விலை அதிகரிக்காமல் இருப்பதனால் ஒரு லீட்டர் டீசல் விற்பனையின்போது 50 ரூபா நட்டத்தையும் ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனையின் போது 16 ரூபா நட்டத்தையும் கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது.

இவ்வாறான பின்னணியில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கடந்த 7ஆம் திகதி நிதியமைச்சிடமும் வலுசக்தி அமைச்சிடமும் வலியுறுத்தினார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...