நாடு திரும்பினர் 8
அரசியல்இலங்கைசெய்திகள்

உக்ரைனில் இலங்கையர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சு!!

Share

உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 42 இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களில் எழுவர் மாணவர்கள் ஆவர்.

அத்துடன், உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை தூதரகமொன்று உக்ரேனில் இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரேனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை துரித கதியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...