Long Time Theif Arrested Nelliyadi Jaffna 1 e1644144629244
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் வசமாக சிக்கினார்!!

Share

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வேதாரண்யேஸ்வரா வித்தியாலயம், யாக்கரு வித்தியாலயம் மற்றும் விக்கினேஸ்வரா வீதியில் உள்ள மாதா ஆலயம் மற்றும் கணவாய் பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசந்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வெள்ளிக்கிழமை (04) கரணவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்களையும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொலைபேசி தங்க நகை என்பன மீட்க்கப்பட்டிருந்தன.

மேலும் அவரது உடைமையில் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்த குற்றத்தடுப்பு பிரிவினர், பிரதான சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...