vijitha herath
இலங்கைஅரசியல்செய்திகள்

அடுத்த ஆட்சி அமைப்பது நாமே – மார்தட்டும் ஜே.வி.பி!!

Share

அடுத்து இலங்கையில் ஆட்சி அமைப்பது ஜே.வி.பி யாக மட்டுமே இருக்க முடியுமென மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஜே.வி.பியின் வாக்குவங்கி என்பது வெறும் 3 வீதம் அல்ல. அந்த எண்ணிக்கை தற்போது 75 வீதமாக அதிகரித்துள்ளது.

பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களும், மக்களும் எம்முடனேயே இருக்கின்றனர். அதனால்தான் ஜே.வி.பியின் எழுச்சியை தடுப்பதற்கு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாகவே முட்டைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. முடிந்தால் அரசியல் கொள்கை அடிப்படையில் மோதுமாறு சவால் விடுக்கின்றேன்.

அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் குண்டர் குழுவை பயன்படுத்திய அரசியல் தரப்பு அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

இன்று முட்டை தாக்குதல் நடத்தியவர்கள், நாளை எதையும் செய்யலாம். எனவே, அநுரவை காக்குமாறு நாட்டு மக்களும் கோரிவருகின்றனர்.” – என்றார் .
#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...