sassdc
செய்திகள்உலகம்

டோங்காவில் சுனாமி! ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன

Share

பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் ஒரு தேவாலயமும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.

கடலுக்கடியில் Hunga Tonga-Hunga Haʻapaii எனும் எரிமலை வெடித்ததையடுத்து, பசிபிக்கின் தென் பிராந்தியத்தில் மிகப்பெரும் அதிர்வு பதிவாகியிருந்தது. இந்த எரிமலை அந்த நாட்டின் தலைநகரிலிருந்து 65 Km தூரத்தில் கடலின் உள்ளே அமைந்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பையடுத்து, டோங்கா முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துச் சென்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெடித்ததில் வௌியான புகை வானை நோக்கி 20 கிலோமீட்டர் உயரம் வரை செல்வதாக டோங்கா புவிச்சரிதவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...