dgrthfyttj
உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் மகனை பார்க்க தந்தைக்கு தடை

Share

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கனடா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தடுப்பூசி செலுத்தாததால் 12 வயது மகனை பார்க்க தந்தைக்கு அதிரடி தடை

ஒமைக்ரான் உருமாற்றம் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்த அலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் தினசரி பாதிப்பு மில்லியனை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவினாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆனால், கனடாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவ வரி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாததாலும், பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக பேசியதாலும் தந்தை ஒருவர் 12 வயது சிறுவனை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கனடாவில் 12 வயது, நான்கு வயது, ஏழு மாதம் குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கனடாவில் ஐநது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்மணியின் 12 வயது சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் 12 வயது சிறுவனின் தந்தை, அந்த சிறுவனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை தனது மகனை விடுமுறை நாட்களில் பார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.

அப்போதுதான் அந்த பெண்மணி, அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக உள்ளார். இதனால் தனது மகனை சந்திக்க தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் வரை மகனை பார்க்க தடைவிதிக்கப்படுகிறது. அதற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தந்தை தடுப்பூசி செலுத்தாமல் மகனை சந்திப்பது, அந்த குழந்தையின் உடல் நலத்திற்கு நல்லது கிடையாது எனக்கூறி சந்திக்க தடைவிதித்துள்ளது.

கனடாவின் கியூபெக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...

Untitled 56
உலகம்செய்திகள்

மத ரீதியாகப் போரை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது: திருத்தந்தை லியோவின் முக்கிய உரை!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், வன்முறை மற்றும் அழிவுக்கான வேண்டுதல்களைக் கடவுள்...