5
செய்திகள்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் ! நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன .

Share

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டும், நீதிகோரியும் ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களின் பங்குபற்றலுடன் விசேட செபவழிபாடு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

26

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 1000 நாட்களாகின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இது தொடர்பிலும் நாட்டு மக்கள் தற்போது
எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான விசேட
செப வழிபாடொன்றை நடத்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்திருந்தது.

இதற்கமைவாக நாளை 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவிலுள்ள இலங்கை மாதா கெபியிலிருந்து பசிலிக்கா தேசிய ஆலயம்வரை ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மக்கள் அனைவரும் செபமலை மற்றும் செபங்கள் உச்சரித்து பவனி செல்வார்கள்.

அதன்பின்னர் பேராயர் தலைமையில் செப வழிபாடுகள் இடம்பெறும்.

#srilankanews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....