static image cdn
செய்திகள்அரசியல்இலங்கை

அண்ணே எனக்கும் ஒரு காஸ் தாங்கோ!! – பின்னால் சென்ற எம்.பி!!

Share

 

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா க​மகே. அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதையடுத்து எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.

இந்நிலையில், பெலவத்தையிலுள்ள லிட்ரோ முகவரிடம் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்றபோது காஸ் தீர்ந்துவிட்டது.

சளைக்காத அவர் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கும் சென்றுள்ளார். ஆனால் தொடர் ஏமாற்றம்.

இன்றைய நாள் எனக்கு காஸ் வாங்குவதுடனேயே சென்று விடுமோ? என எண்ணிய சமயம் அவருடைய கண்களில் நீலநிற எரிவாயுக்களை ஏற்றிய நீண்ட வண்டி ஒன்று தென்பட்டுள்ளது.

உடனடியாக அத்துருகியவில் இருந்து துரத்திய அவர் ஒருவாறு ஒருவல பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.

பின்பு தன்னை பாராளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய அவர் காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...