static image cdn
செய்திகள்அரசியல்இலங்கை

அண்ணே எனக்கும் ஒரு காஸ் தாங்கோ!! – பின்னால் சென்ற எம்.பி!!

Share

 

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா க​மகே. அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதையடுத்து எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.

இந்நிலையில், பெலவத்தையிலுள்ள லிட்ரோ முகவரிடம் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்றபோது காஸ் தீர்ந்துவிட்டது.

சளைக்காத அவர் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கும் சென்றுள்ளார். ஆனால் தொடர் ஏமாற்றம்.

இன்றைய நாள் எனக்கு காஸ் வாங்குவதுடனேயே சென்று விடுமோ? என எண்ணிய சமயம் அவருடைய கண்களில் நீலநிற எரிவாயுக்களை ஏற்றிய நீண்ட வண்டி ஒன்று தென்பட்டுள்ளது.

உடனடியாக அத்துருகியவில் இருந்து துரத்திய அவர் ஒருவாறு ஒருவல பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.

பின்பு தன்னை பாராளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய அவர் காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....