1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய வருடத்தில் புதிய பாதையில் சஜித் அணி!!!

Share

புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்திற்கு மிகவும் தோல்வியடைந்த வருடமாக இந்த வருடம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் பொது மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான விலையை ஒப்பிடுகையில், 1 கிலோ போஞ்சி ரூ.210ல் இருந்து ரூ.440 ஆகவும், கரட் ரூ.160ல் இருந்து ரூ.560 ஆகவும், 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.420ல் இருந்து 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

புதிய வருடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நிதி நெருக்கடியைக் கடப்பதற்கும் ஒரு திட்டத்துடனும் தெளிவான பார்வையுடனும் புதிய ஆண்டிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள் .

எதிர்காலத்தில் தேசத்தை உயர்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...