தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் இம்முறை உரையாற்றவில்லை.
வழமையாக 2 ஆம் 3 ஆம் வாசிப்புமீதான விவாதங்களின் போது இரா. சம்பந்தன் கட்டாயம் உரையாற்றுவார். அவரது விளக்கங்கள் விரிவானதாகவும் அமையும்.
ஆனால் இம்முறை உடல்நலக் குறைவால் ஒருநாள் கூட உரையாற்றவில்லை.
இறுதிநாள் வாக்கெடுப்பன்று சபைக்கு வருகைத்தந்த அவர் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment