27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

Share

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புத்துறை வீதியில், நெடுங்குளம் சந்திக்கு அருகிலேயே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மாணியம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரொபின்சன் டட்னி மற்றும் அவரது சகோதரியான 19 வயதுடைய ரொபின்சன் டில்ஷிகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் உயிர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் யாழ்ப்பாணப் பொலிஸார், டிராக்டர் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், வாகனச் செலுத்துநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...