18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

Share

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவாலான பொருளாதார மற்றும் எரிசக்தி சூழ்நிலைகளை அரசாங்கம் எப்படிக் கையாண்டு வருகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை ஜனாதிபதி தனது உரையில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17 ஆம் திகதி) இரவு 7:30 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாகவும் சபை முதல்வர் தெரிவித்தார். வாராந்த விடுமுறை அறிவிப்புகள், எரிபொருள் கையிருப்பு தொடர்பான அமைச்சர்களின் விளக்கங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் இந்த உரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இன்றைய உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...