13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நேற்று (15) இரவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

டிஜிட்டல் எரிபொருள் விநியோக முறை (QR Code) மூலம் தீவகப் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் சுகாதாரம், கல்வி, விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட முக்கிய துறைகளின் எரிபொருள் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்க்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும், எரிபொருள் தேவைப்படும் அத்தியாவசியப் பணிகளைப் பிரதேச செயலகங்கள் மட்டத்தில் ஒருங்கிணைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடந்த கால ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியே தற்போதைய எரிபொருள் களஞ்சியப்படுத்தல் சிக்கலுக்குக் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார். “நாட்டில் எரிபொருளை 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்கப் போதிய வசதிகள் இல்லை. உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை 100 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மே மாதம் வரையிலான எரிபொருள் கையிருப்பினைப் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தவே QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், மாவட்ட அரச அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...