17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

Share

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். எரிபொருள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த எதிர்கால அபாயங்களை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்வது குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டது.

எரிபொருள் மற்றும் எரிவாயு: தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும், உலகச் சந்தை விலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மேலதிக இருப்புகளை முகாமைத்துவம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. எரிவாயு சேமிப்பு வசதிகளைக் குறுகிய காலத்தில் மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் தட்டுப்பாடின்றி உணவு இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எவ்வாறாயினும், பணவீக்கம் உயராமல் இருக்கவும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சூயஸ் கால்வாய் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படக்கூடிய தடைகளைச் சமாளிக்க, கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு மேலதிக வசதிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தற்போது நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரப்பட்டது.

தரவு மையங்கள் (Data Centers) போன்ற புதிய முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையிலான குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. எழும் கண்டனம் – தமிழர்தாயகம்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...