04 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புல்மோட்டையில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீற்றர் எரிபொருளுடன் வர்த்தகர் கைது!

Share

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவதாக புல்மோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (03) இரவு விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சட்டவிரோத விற்பனை தொடர்பாக புல்மோட்டை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இவர் அதிக இலாபத்திற்காக டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருளைச் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறான முறைகேடுகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...