நடிகர் விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், “கணவன்-மனைவி இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி பேச நாம் யாருக்கும் உரிமை இல்லை” என அதிரடியாகக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவல்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசிய குஷ்பு, “தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் என்ன பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை” எனத் தெரிவித்தார். விஜய்யின் விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.