07
இந்தியாசெய்திகள்

கணவன்-மனைவி விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை: நடிகர் விஜய்யின் விவாகரத்து குறித்து குஷ்பு அதிரடி!

Share

நடிகர் விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், “கணவன்-மனைவி இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி பேச நாம் யாருக்கும் உரிமை இல்லை” என அதிரடியாகக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவல்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய குஷ்பு, “தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் என்ன பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை” எனத் தெரிவித்தார். விஜய்யின் விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...

04 2
செய்திகள்உலகம்

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை சேதம்: யுனெஸ்கோ அமைப்பு கடும் கவலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தற்போதைய...