06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

Share

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது மொத்தம் 29,608 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 பேர், நீதிமன்றத்தினால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பிலும் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 309 சாரதிகள், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,392 பேர் ,கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைக் குறைக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...