lan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இந்தியாவில் சிக்கிய ‘போடி லாசி’: நாடு கடத்த சிஐடி அதிகாரிகள் இந்தியா விரைவு!

Share

இலங்கையின் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘போடி லாசி’ என அழைக்கப்படும் நபரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் குழுவொன்று இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் 9 ஆம் தேதி, பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் ‘போடி லாசி’ விடுவிக்கப்பட்டார். இருப்பினும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் பதுங்கியிருந்தார். இது குறித்துப் பொலிஸ் மா அதிபர் (IGP) நேரடியாக இந்தியப் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது குறித்து சர்வதேச பொலிஸார் (Interpol) இலங்கை பாதுகாப்புத் தரப்பிற்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது மும்பையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரைப் பொறுப்பேற்று, இலங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காகவே சிஐடி அதிகாரிகள் இந்தியா சென்றுள்ளனர்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதாள உலகக் கும்பல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இவரின் கைது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...