01
செய்திகள்அரசியல்இலங்கை

பிசுபிசுத்துப்போன பௌத்த மாநாடு – சதி முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த கிண்டல்!

Share

கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட மகா சங்க மாநாடு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும், அவை முற்றாகப் “பிசுபிசுத்துப்போய்” விட்டதாகவும் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.டி. லால் காந்த கிண்டலாகத் தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். சில அரசியல் குழுக்கள் மதத்தின் பெயரால் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்த்ததாகவும், ஆனால் அந்தச் சதித் திட்டங்கள் எடுபடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் திகதி கொழும்பில் கூடிய சில பௌத்த தேரர்கள், அரசாங்கம் பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “ஆயிரக்கணக்கான தேரர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் வரவில்லை. மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ கிளப்புவதன் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை இந்தப் பிசுபிசுத்துப்போன மாநாடு நிரூபித்துள்ளது,” என விமர்சித்தார்.

மேலும், மதத் தலைவர்கள் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவுரைகளை வழங்கலாமே தவிர, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்படக்கூடாது என லால் காந்த வலியுறுத்தினார். பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றும், மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்பவர்கள் முதலில் தங்களின் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். அரசாங்கம் எவருக்கும் அஞ்சாது தனது மக்கள் பணிகளைத் தொடரும் என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...