02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

Share

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கும் தனது புதிய இலக்கை அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் “சுயமாக இயங்கும் நகரம்” ஒன்றை அமைப்பது சாத்தியம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதை விட நிலவிற்குச் செல்வது மிகவும் இலகுவானது மற்றும் விரைவானது எனச் சுட்டிக்காட்டிய மஸ்க், செவ்வாய்க்குச் செல்ல 6 மாதங்கள் தேவைப்படும் நிலையில், நிலவை வெறும் 2 நாட்களில் சென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, நிலவில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களை அங்கேயே தயாரிப்பதே மஸ்க்கின் பிரதான இலக்காகும். செவ்வாய் கிரகத்திற்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விண்கலங்களை அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், நிலவிற்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும் என்பது இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும். நிலவின் மண்ணைப் பயன்படுத்தி வளங்களைத் தயாரிப்பது பூமியில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை ஒத்ததுதான் என நிபுணர்கள் கூறினாலும், நிலவின் கடுமையான வெப்பநிலை மற்றும் தூசு நிறைந்த சூழல் பெரும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2027 மார்ச் மாதத்தில் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதுடன், நாசாவின் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன், விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களை அமைக்கும் லட்சியத்தையும் மஸ்க் கொண்டுள்ளார். மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தனது முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள அவர், செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான ஒரு முக்கிய “படிக்கல்லாக” நிலவு அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

01
செய்திகள்அரசியல்இலங்கை

பிசுபிசுத்துப்போன பௌத்த மாநாடு – சதி முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த கிண்டல்!

கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட மகா சங்க மாநாடு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப்...