இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று (18) திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பின் போது எரிமலையிலிருந்து கரும்புகை மற்றும் சாம்பல் பல நூறு மீட்டர் உயரத்திற்கு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைச் சீற்றத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் “இரண்டாம் நிலை” (Level II) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்த அதே தருணத்தில் அப்பகுதியில் நான்கு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவை 1.6 முதல் 3.6 வினாடிகள் வரையிலான இடைவெளியில், சுமார் 14 முதல் 36 வினாடிகள் வரை நீடித்ததாக இந்தோனேசியாவின் எரிமலை ஆய்வு மற்றும் புவியியல் அபாயத் தணிப்பு மையம் (PVMBG) தெரிவித்துள்ளது. எரிமலைக் குழம்பின் நகர்வுகள் காரணமாக நிலத்தடியில் ஏற்பட்ட அழுத்தமே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எரிமலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகைகள் மற்றும் சாம்பல் மழை காரணமாகச் சுவாசப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எரிமலை வாயிலிலிருந்து 3 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் மக்கள் எவரும் நுழைய வேண்டாம் எனவும், சாம்பல் படிவுகள் படியும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் உள்ளூர் நிர்வாகம் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.