1 84
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்கரை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

Share

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (09) திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளைக் கருத்திற்கொண்டு, பிணை மனுக்களை நிராகரித்த மேல் நீதிமன்றம், அனைத்துப் பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

 

 

Share
தொடர்புடையது
07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...

04 2
செய்திகள்உலகம்

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை சேதம்: யுனெஸ்கோ அமைப்பு கடும் கவலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தற்போதைய...