1 84
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்கரை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

Share

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (09) திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளைக் கருத்திற்கொண்டு, பிணை மனுக்களை நிராகரித்த மேல் நீதிமன்றம், அனைத்துப் பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...