image 62a50f36cc
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கேகாலையில் பாரிய சுற்றிவளைப்பு: 15 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டை மற்றும் கடமான் கொம்புகள் மீட்பு!

Share

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கேகாலை மற்றும் குருநாகல் பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் வனவிலங்குப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 1050 கிலோ வல்லப்பட்டை (இதன் பெறுமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது).5 கடமான் கொம்புகள், 3 மான் கொம்புகள், ஒரு தனி மான் கொம்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட அரிய வகை சிப்பிகள்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு, ரிட்டிகல மற்றும் குருநாகல் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கேகாலை மற்றும் அலபலாவலவத்துர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு சட்ட விதிகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களை, விரைவில் கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...