image ac09cfb2fa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெப்ரவரி 10 முதல் நிச்சயமாக 1,750 ரூபா சம்பளம்! – பிரதி அமைச்சர் பிரதீப் ஹட்டனில் உறுதி.

Share

தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் எவ்விதப் போராட்டங்களுமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10-ஆம் திகதி தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா சம்பளம் நிச்சயமாகக் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டீ.கே.டபிள்யூ (DKW) கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையில் சம்பள அதிகரிப்பைத் தொடர்ந்து, மலையக மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பணிகளும் விரைவில் முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களில் கல்வித்துறை மற்றும் அரச சேவைகளில் நிலவிய அரசியல் தலையீடுகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயற்பட முடிகிறது.

அரசியல் தலையீடுகள் இல்லாத காரணத்தினாலேயே, தற்போது போதைப்பொருள் மாஃபியாக்களை அச்சமின்றி பொலிஸாரால் கைது செய்ய முடிகிறது.

கல்வி என்பது சமூக விடிவின் கண் போன்றது. அதிகாரிகள் மக்களுக்குச் சரியாகச் சேவை செய்யாத பட்சத்தில் மாத்திரமே அமைச்சின் தலையீடு இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்த நிகழ்வின் போது, பயிற்சியினை நிறைவு செய்த 400 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் எதிர்காலம் சிறக்கப் பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...