image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

Share

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் இஞ்சி 300 ரூபா முதல் 500 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

விநியோகத் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலை மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.

கடந்த நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாட்டின் பிரதான இஞ்சி சாகுபடி நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியமையால் சந்தைக்கு வரும் இஞ்சியின் அளவு பெருமளவில் குறைந்துள்ளது. இதுவே இந்த அதீத விலை உயர்வுக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது.

தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இந்த பாரிய இடைவெளி காரணமாக, வரும் வாரங்களிலும் இஞ்சியின் விலை உயர்ந்த மட்டத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...