செய்திகள்இலங்கைபிராந்தியம்

என் நாய் வளர்ப்பைத் தடுக்க யாராலும் முடியாது! – பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண் ஆக்ரோஷம்!

Share

வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து வந்து தனது வீட்டில் வளர்த்து வரும் பெண் ஒருவர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முன்னால் ஆக்ரோஷமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த சம்பவம் வலிகாமம் மேற்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், வீதியோரங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாய்களைப் பிடித்து வந்து, தனது சொந்தப் பணத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பராமரித்து வருகிறார்.

தற்போது அவரது வீடு ஒரு பெரும் நாய் பண்ணையாக மாறியுள்ள நிலையில், நாய்களின் சத்தம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாகத் தமக்குத் தொல்லை ஏற்படுவதாக அயலவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாய்களைப் பராமரிப்பதற்காக அவர் அமைத்துள்ள கட்டடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தப் பெண், தனது நிலைப்பாடு குறித்துக் கடும் தொனியில் பேசினார்:

அவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கடுமையான விவாதங்களையும் கிளப்பியது. எனினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாது அவர் தனது முடிவில் உறுதியாக நின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...