செய்திகள்இலங்கைபிராந்தியம்

என் நாய் வளர்ப்பைத் தடுக்க யாராலும் முடியாது! – பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண் ஆக்ரோஷம்!

Share

வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து வந்து தனது வீட்டில் வளர்த்து வரும் பெண் ஒருவர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முன்னால் ஆக்ரோஷமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த சம்பவம் வலிகாமம் மேற்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், வீதியோரங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாய்களைப் பிடித்து வந்து, தனது சொந்தப் பணத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பராமரித்து வருகிறார்.

தற்போது அவரது வீடு ஒரு பெரும் நாய் பண்ணையாக மாறியுள்ள நிலையில், நாய்களின் சத்தம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாகத் தமக்குத் தொல்லை ஏற்படுவதாக அயலவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாய்களைப் பராமரிப்பதற்காக அவர் அமைத்துள்ள கட்டடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தப் பெண், தனது நிலைப்பாடு குறித்துக் கடும் தொனியில் பேசினார்:

அவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கடுமையான விவாதங்களையும் கிளப்பியது. எனினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாது அவர் தனது முடிவில் உறுதியாக நின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...