images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

Share

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு ‘The Great British National Strike’ அமைப்பு அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வமைப்பின் தலைவரான ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) விடுத்துள்ள அறிவிப்பில் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது வெறும் அலுவலக வேலைநிறுத்தம் மட்டுமல்லாது, பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல், பொருட்களைக் கொள்வனவு செய்யாதிருத்தல் (Shopping) என அனைத்துப் பொதுச் செயற்பாடுகளையும் ஒரு வாரத்திற்கு நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து ரிச்சர்ட் டொலால்ட்சன் தெரிவித்துள்ளதாவது: சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர், குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மற்றும் நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்பவர்களை உடனடியாக நாடுகடத்த வேண்டும்.

நிலைமை சீராகும் வரை புதிய புலம்பெயர்தல் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.

சட்டப்படி வந்தவர்களை மதித்தாலும், மருத்துவம், கல்வி, வீடமைப்பு போன்ற பொதுச் சேவைகளில் பிரித்தானிய குடிமக்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும்.

இந்த வேலைநிறுத்த அழைப்பு பிரித்தானியாவில் எந்தளவு தாக்கத்தைச் செலுத்தும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ரிச்சர்ட் டொலால்ட்சன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட இந்த அழைப்பிற்கு இதுவரை சுமார் 2,000 ‘விருப்பங்கள்’ (Likes) மட்டுமே கிடைத்துள்ளன. இதனால், நாடு தழுவிய ரீதியில் மக்கள் இதில் பங்கேற்பார்களா அல்லது இது ஒரு சிறிய குழுவின் முயற்சியாக முடிந்துவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசாங்கம் புலம்பெயர்தல் சட்டங்களைக் கடுமையாக்கி வரும் சூழலில், இவ்வாறான போராட்ட அழைப்புகள் பொதுமக்களிடையே எத்தகைய விவாதங்களை உருவாக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...