check sri lanka to restore hundreds of cyclone hit religious sites 693812ec004b7 600
செய்திகள்இலங்கை

கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்: சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பம்!

Share

டிட்வா (Didwa) சூறாவளியினால் சேதமடைந்த மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விரைவாகப் புனர்நிர்மாணம் செய்யும் நோக்கில், ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ எனும் தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் நாளை (27) ஆரம்பிக்கிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வுகள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
முற்பகல் 10.00 மணி: கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ போதிருக்காராம விஹாரை.
பிற்பகல் 3.00 மணி: மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரை.

அனர்த்தத்தின் போது நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த இடங்களின் தொல்லியல் பெறுமதிகள் (Archaeological value) சிதையாத வகையில், மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சேதமடைந்த இடங்களை உடனடியாகப் புனரமைத்து, அவற்றை மீண்டும் சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் பழைய நிலைக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மத நல்லிணக்கச் சின்னங்களையும், கலாசார விழுமியங்களையும் மீட்டெடுப்பதற்கான ஒரு மைல்கல்லாக இந்தத் திட்டம் அமையவுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...