யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாய் கழிப்பறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவரது மகன் தேடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த தாயின் சடலம் மீதான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக உடற்கூற்றுப் பரிசோதனைகள் (Autopsy) மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.