1721635918 Jeevan Thondaman DailyCeylon
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா அனர்த்த நிவாரணத்தில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு!

Share

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை அரசாங்கம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அனர்த்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து குற்றச்சாட்டுக்களைச சுட்டிக்காட்டினார்:

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மலையக மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அனர்த்த நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள், முறையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமலேயே வலுக்கட்டாயமாக மீண்டும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்ட மக்களுடன் எவ்விதக் கலந்தாலோசனையும் செய்யாமல், மாடுகளை அனுப்புவது போல அவர்களை மீண்டும் அதே ஆபத்தான இடங்களுக்கு அரசாங்கம் துரத்துகிறது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மீண்டும் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது மண்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் சம்பவித்தால், அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் எச்சரித்தார். மலையக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை விடயத்தில் அரசாங்கம் காட்டும் இந்த மெத்தனப் போக்கு நியாயமற்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...