images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

Share

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் ஒன்று நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.

இன்று (20) முற்பகல் 11:00 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இயக்கச்சி பகுதியிலிருந்து இயக்கச்சி சந்தி நோக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் தனது விசேட மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக வந்த ‘பட்டா’ (Batta) ரக வாகனம், மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்தில் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பளை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தப்பியோடிய வாகனத்தை அடையாளம் காண்பதற்காக, விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...