image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

Share

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கமையத் தங்களது எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைப்புச் செயல்முறை தொடர்ந்து தாமதமடைந்து வருவதால், திட்டமிட்டபடி சபையிலிருந்து விலகித் தங்களது புதிய வாழ்வாதார முயற்சிகளைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த இழுபறி நிலையால் 2,200 ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதாரக் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே அண்மையில் பதவி விலகியிருந்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தில், “சபையைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ திகதியை அறிவிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்ததை ஊழியர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் மற்றும் புதிய கட்டமைப்பு உருவாகும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிப்பதன் மூலமே, தங்களால் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று அடுத்தகட்ட வாழ்க்கையைத் தொடங்க முடியும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...