image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

Share

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கமையத் தங்களது எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைப்புச் செயல்முறை தொடர்ந்து தாமதமடைந்து வருவதால், திட்டமிட்டபடி சபையிலிருந்து விலகித் தங்களது புதிய வாழ்வாதார முயற்சிகளைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த இழுபறி நிலையால் 2,200 ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதாரக் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே அண்மையில் பதவி விலகியிருந்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தில், “சபையைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ திகதியை அறிவிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்ததை ஊழியர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் மற்றும் புதிய கட்டமைப்பு உருவாகும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிப்பதன் மூலமே, தங்களால் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று அடுத்தகட்ட வாழ்க்கையைத் தொடங்க முடியும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...