26 6964df8a83bee
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முரசுமோட்டையில் கோர விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி; ஒருவர் படுகாயம்!

Share

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை நரசிம்மன் கோவிலுக்கு அருகில் இன்று (12) மாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை சுமார் 5:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் வீரியம் காரணமாக நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் யார்? எங்குச் சென்றார்கள்? என்பது குறித்த விபரங்களைச் சேகரித்து வரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...