1768145880 unnamed
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மின்சார சபை விடுதியில் புதையல் வேட்டை: 4 ஊழியர்கள் அதிரடிப்படையினரால் கைது!

Share

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் சுற்றுலா விடுதி வளாகத்தில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் நால்வர் விசேட அதிரடிப்படையினரால் (STF) ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி டி.ஆர்.எல். அதுக்கோரல தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நால்வரும் அனுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய நவீன உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உரிய அனுமதியின்றி அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டமை.தாம் தங்கியிருந்த மின்சார சபையின் சுற்றுலா விடுதியைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிரடிப்படையினர், அவர்களைக் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மின்சார சபை ஊழியர்களே இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...