image b3ba06ad00
இலங்கைஅரசியல்செய்திகள்

அனுராதபுரத்தில் பரபரப்பு: விகாரையின் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிய தேரர் கைது!

Share

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் ஒருவர் பொலிஸாரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

நடந்தது என்ன? விகாரையின் தர்ம போதனை மண்டபத்திற்குள் புதையல் தோண்டப்படுவதாக 119 அவசர இலக்கத்திற்குப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்தத் தேரர் தனியாகவே மண்டபத்தின் தரையை சுமார் 4 அடி ஆழம் வரை தோண்டியிருந்தமை கண்டறியப்பட்டது.

விகாரைக்குள் புராதன சின்னங்கள் அல்லது புதையல் ஏதும் இருப்பதாகக் கருதி தேரர் இச்செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து கால திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புனிதமான விகாரை வளாகத்திற்குள்ளேயே தேரர் ஒருவரே இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...