ZWB3SSOZ4BPMZBJGFWYDQWLNH4
செய்திகள்அரசியல்இலங்கை

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை இலங்கை வருகை: முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!

Share

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (12) இலங்கை வருகின்றார். எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு அவர் இலங்கை வரவுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை காலை போசனத்துடன் சந்தித்து வாங் யீ கலந்துரையாடுவார்.

கொழும்பு போர்ட் சிட்டி (Port City) உள்ளிட்ட சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்படவுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மற்றும் கொழும்புக்கான விமான சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பில் இலங்கையினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியைச் சந்தித்த குறுகிய காலப்பகுதிக்குள் சீன வெளியுறவு அமைச்சரின் இந்த வருகை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ரீதியாக மூலோபாயப் பங்காளிகளுடன் பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தும் சீனாவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...