26 6962660786ad0
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துணிகரம்: விகாரையின் மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை மீண்டும் திருட்டு!

Share

திருகோணமலை – சேருநுவர காவல்பிரிவுக்குட்பட்ட சோமவதி வீதியில் அமைந்துள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் கடந்த 6-ஆம் திகதி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று ஏற்கனவே திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிலையே நேற்று (10) மீண்டும் திருடப்பட்டுள்ளது.

இன்று காலை சிலை திருடப்பட்டிருப்பதை அவதானித்த விகாரை தரப்பினர், இது குறித்து சேருநுவர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு தடவைகள் புத்தர் சிலைகள் திருடப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...