26 6962660786ad0
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துணிகரம்: விகாரையின் மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை மீண்டும் திருட்டு!

Share

திருகோணமலை – சேருநுவர காவல்பிரிவுக்குட்பட்ட சோமவதி வீதியில் அமைந்துள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் கடந்த 6-ஆம் திகதி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று ஏற்கனவே திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிலையே நேற்று (10) மீண்டும் திருடப்பட்டுள்ளது.

இன்று காலை சிலை திருடப்பட்டிருப்பதை அவதானித்த விகாரை தரப்பினர், இது குறித்து சேருநுவர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு தடவைகள் புத்தர் சிலைகள் திருடப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...