images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

Share

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) படங்களை உருவாக்குவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதன் முக்கிய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுவரை எக்ஸ் (X) தள பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த ‘படம் உருவாக்கும்’ (Image Generation) மற்றும் திருத்தும் வசதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இனி மாதக் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

பயனர்கள் தமது கடன் அட்டை (Credit Card) விபரங்களை வழங்க வேண்டியிருப்பதால், தவறான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களைச் சட்டரீதியாக எளிதில் அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்த விவகாரத்தை “அருவருப்பானது மற்றும் சட்டவிரோதமானது” எனக் கண்டித்துள்ளார். தவறு செய்யும் பட்சத்தில் ‘Ofcom’ மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Grok தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 2026 இறுதி வரை பாதுகாப்பாக வைக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா: இது குறித்து 72 மணித்தியாலங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு நாடுகளும் தமது கடுமையான கண்டனங்களை உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளித்துள்ள ஈலான் மஸ்க், “சட்டவிரோதமான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள், நேரடி குற்றவாளிகள் எதிர்கொள்ளும் அதே சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். மேலும், எக்ஸ் தளத்தின் பாதுகாப்புப் பிரிவு சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்கி, காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...