Jeevan
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு, ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபுகள் மற்றும் கண்ணியம் குறித்து அந்தத் தரப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாடாளுமன்றில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை விமர்சிப்பதால் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை,” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விடத்திலும் தேசிய மக்கள் சக்தியைக் கைவிடவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மீது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள காரணத்தினாலேயே, தாம் அந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்கியதாக அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு அரசியல் சூழலில், ஒருவரையொருவர் சேறு பூசுவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...