images 6 2
செய்திகள்அரசியல்இலங்கை

கெஹெலிய சிறைக்குச் சென்றால் பிரதமரும் செல்ல வேண்டும்: நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேசம்!

Share

தரம் 6 ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் (Module) இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் சிறைத்தண்டனையுடன் ஒப்பிட்டு கருத்துக்களை முன்வைத்தார்.

தரமற்ற ஊசி மருந்து விவகாரத்தில் அமைச்சர் கெஹெலிய நேரடியாக ஊசி போடவில்லை என்றாலும், அமைச்சராக அவரே சிறைக்குச் சென்றார். அதேபோல், கல்வி அமைச்சராகப் பிரதமர் இருக்கும்போது பாடத்திட்டத் தவறுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

“மாகாண சபைப் பணத்தை முன்கூட்டியே மீளப் பெற்ற விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தும், அரசியல் ரீதியாக நானே சிறைக்குச் சென்றேன்” எனத் தனது கடந்த காலச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத் ஆகியோருக்குச் சட்டம் ஒருவிதமாகவும், பிரதமருக்கு ஒருவிதமாகவும் இருக்க முடியாது. தவறுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும், இல்லையெனில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் (Module) தப்பான மொழிநடை மற்றும் பொருத்தமற்ற உதாரணங்கள் உள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...