26 69589bb718127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகாமத்தில் குரங்கு தாக்குதல்: பள்ளிவாசல் பணியாளர் உட்பட இருவர் காயம்.

Share

திருகோணமலை, தம்பலகாமம் – அரபா நகர் பகுதியில் நிலவும் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்மைய நாட்களாக குரங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தம்பலகாமம் அரபா நகர் பள்ளிவாசலில் பணியாற்றும் முஅத்தின் (பணியாளர்), நேற்று (05) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குரங்கு ஒன்றினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அவர், உடனடியாகக் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதே குரங்கால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது குறித்து பலமுறை அறிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரபா நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குரங்குகளின் பயம் காரணமாக மக்கள் வீதிகளில் நடமாட அஞ்சுகின்றனர்.பள்ளிவாசலுக்குச் சென்று தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள இந்தக் குரங்கைப் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...