articles2FzixoDT3CyssagQNOiIL2
செய்திகள்இலங்கை

அம்பாறையில் பரபரப்பு: பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

Share

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகாமையில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (06) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற தந்தை ஒருவர், வீதியோர வெற்றுக்காணியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் இந்தக் காணியில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதாலும் நிலத்தில் புதைந்திருந்த கைக்குண்டு வெளியே தெரிந்துள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டுத் தயாரிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இப்பகுதியில் நிலவிய மோதல்களின் போது விடுதலைப் புலிகளினால் இது கைவிடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சவளக்கடை பொலிஸார் அவ்விடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தனர்.

கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மக்கள் நடமாட்டமில்லாத பாதுகாப்பான இடத்தில் குண்டைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலைக்கு அருகிலேயே குண்டு மீட்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...