gettyimages 2247859148 20260101214546430
செய்திகள்இந்தியா

வெனிசுலா ஜனாதிபதி கைது: இந்தியா கவலை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தல்!

Share

வெனிசுலாவில் அமெரிக்கச் சிறப்புப் படையினரின் வான்வழித் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம் குறித்து இந்தியா தனது உத்தியோகபூர்வ கவலையை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையை இந்தியா தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

வெனிசுலா மக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளுக்கான ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்காத வகையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

கராகஸில் (Caracas) உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாத கால அழுத்தங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் வெனிசுலாவின் இடதுசாரித் தலைவரான நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டார். அவர் தற்போது விசாரணைக்காக நியூயோர்க்கிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...